January 7, 2019 தண்டோரா குழு
உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரதியார் பல்கலை.,யில் தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் பாரதியார் பல்கலை.யில் தொலைதூர கல்வி மையத்தை துவக்க நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை துவக்கியதை எதிர்த்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்திரவிட்டுள்ளார்.