• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதவி பேராசிரியார் சான்றிதழ்களை தனியார் கல்லூரி ஒப்படைக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

September 17, 2021 தண்டோரா குழு

கோவை நவாவூர் மருதாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவர் தெலுங்குபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அரசு பணி கிடைத்ததை தொடர்ந்து அந்த கல்லூரியில் இருந்து விலகினார்.பின்னர் தனது அசல் பட்ட படிப்பு சான்றிதழ்களை தரும்படி அந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணவேணி தனது அசல் சான்றிதழ்களை வழங்கக்கோரி கோவை மாவட்ட நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான உமா ராணி, வரும்27-ந் தேதிக்குள் தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகம், கிருஷ்ணவேணியின் அசல் சான்றிதழ்களை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் ரூ.25 ஆயிரம் அபராத தொகையினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க