• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘உதவித்தொகை பெறும் இளைஞர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ – கோவை மாவட்ட ஆட்சியர்

September 21, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெறும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

“கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பொருட்டு உதவி தொகை பயன்பெறுவோர் தங்களது ஆதார் அட்டை நகல், சாதிச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து ஆதார் எண்ணை பதிவு செய்து தொடர்ந்து பயன்பெற வேண்டும்,” என்றார்.

மேலும் படிக்க