• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘உதவித்தொகை பெறும் இளைஞர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ – கோவை மாவட்ட ஆட்சியர்

September 21, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெறும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

“கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பொருட்டு உதவி தொகை பயன்பெறுவோர் தங்களது ஆதார் அட்டை நகல், சாதிச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து ஆதார் எண்ணை பதிவு செய்து தொடர்ந்து பயன்பெற வேண்டும்,” என்றார்.

மேலும் படிக்க