June 23, 2018
தண்டோரா குழு
உதகையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நடிகர் விஜய் அவர்களின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள விஜய் மன்றத்தின் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் விஜய் மன்றத்தின் நீலகிரி மாவட்ட துணை தலைவர் என்.ஜெயகுமார், தலைமையில்,மாவட்ட துணை செயலாளர் பிரபு முன்னிலையில மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோத்தகிரில் தலைமை மாவட்டம் மன்றங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.