• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகைக்கு சுற்றுலா சென்று மயமான சென்னையை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி

October 3, 2018 தண்டோரா குழு

ஊட்டியில் மாயமானதாக கூறப்பட்ட சென்னையை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த ஜூட் என்பவர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, நேற்று மசினகுடி செல்வதாக ஓட்டல் நிர்வாகத்திடம் கூறிவிட்டு சென்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் ஹோட்டலுக்கு திரும்பாததால், நிர்வாகம் தரப்பில் ஊட்டி எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார், மசினகுடி, கல்லட்டி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் சென்று அவர்களை தேடினர்.

இதற்கிடையில் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்த இன்னோவா கார் கல்லட்டி மலை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 35-வது கொண்டை ஊசி வளைவில் கார் கவிழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று நிகழ்ந்த விபத்து பற்றி இன்றுதான் வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து மீட்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய 7 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க