• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் – பாடகி சின்மயி மனு

May 8, 2019 தண்டோரா குழு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என பாடகி சின்மயி காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மீடூ புகாரை அடுத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் அனுமதிக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ரஞ்சன் கோகாயை எதிர்த்து சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தை அனுமதி அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க