• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

January 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்துக்கு கர்நாடகவில் இருந்து அதிகளவிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் வட இந்தியர்களை குறிவைத்தே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை உக்கடம் லாரி பேட்டையில் போதைப்பொருட்கள் கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனங்களில், கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பாஸ் மற்றும் ஜெய்னுல்லா அபுதீன் ஆகிய இருவரை கைது செய்து உக்கடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க