• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

June 10, 2020 தண்டோரா குழு

உக்கடம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்கள் தனிமனித இடைவெளியில்லாமல் கூட்டமாக அத்தியவாசிய பொருட்களை வாங்க கூடுவது வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த ஞாயிறன்று திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க கூடியதை அடுத்து தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தியது.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஆகியோர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க