• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய்கள் கருத்தடை மையம் திறப்பு

December 7, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

மேலும்,சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்காக புதிய வாகனத்தை மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாநகராட்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சீரநாய்க்கன்பாளையம்,ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.445 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் முதல் ரூ.700 ஆக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடிப்பதற்கும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன்,துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க