• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி

August 10, 2019

கோவை உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி – பொதிமக்களின் முற்றுகையால் கைவிடப்பட்டது.

கோவையில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. இந்த வெள்ளத்தை கொண்டு குளங்களை நிரப்பும் பணியை விட்டு விட்டு, தண்ணீரை சேமிக்காமல், அதிமுக அரசு ஆற்றில் விட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக, கோவை உக்கடம் பெரிய குளத்தில், தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்ணீர் இருந்தால் பணிகள் பாதிக்கும் என, தண்ணீரை நொய்யல் ஆற்றில் வெளியேற்றும் நடவடிக்கையில் குளக்கரையை பின்புறம் வெட்டி வெள்ளத்தை நொய்யல் ஆற்றில் வெள்ளியேற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் தடுத்ததால், தண்ணீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி குளக்கரையை ஸ்மாட் சிட்டி திட்டம் மூலம் கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க