• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈரோடு நகர டி.எஸ்.பி. சுரேஷ்குமார் பணியிடை நீக்கம்- டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி

July 29, 2017 தண்டோரா குழு

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது கைதி ஒருவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியில் இருந்து அவர் ஓய்வு பெற 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அதிரடி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க