• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜூலை 9 ஆம் தேதி போராட்டம்

June 24, 2023 தண்டோரா குழு

இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். நீண்ட ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும் நேற்று பட்னாவில் 16 கட்சிகள் ஒன்று சேர்ந்த ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான, சிறப்பான ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். 2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும்,சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் சர்வாதிகாரத்தை வீழ்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் எவ்வாறு மதச்சார்பற்ற அமைப்புகள் ஓரணியில் உள்ளனர் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பது,இந்தியாவிற்கே முன் மாதிரியாக அமைத்திருக்கிறது.இதே அடிப்படையை பின்பற்றலாம் என்ற தெளிவான கருத்தை கூறியுள்ளார். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது.

மதம் மற்றும் இன்னும் பிற காரணங்களால் நாட்டை பிளவுபடுத்த கூடிய பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது நல்ல முயற்சியாகும்.கூட்டத்தில் ஆம் ஆத்மி எழுப்பிய பிரச்சனை தொடர்பாக காங்கிரஷ் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் விவாதித்து நல்ல முடிவை எடுப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற சட்ட முன்வடிவுகளை ஒப்புதல் வழங்காமல் வைக்கிறார். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்படும், அவர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும அனுமதி வழங்கி தான் ஆக வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க