• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இவர்களின் ஆலோசனைப்படி தான் மோடி கருணாநிதியை சந்தித்திருப்பார் – சு.சாமி கருத்து

November 7, 2017 தண்டோரா குழு

மயிலாப்பூரில் இருக்கும் சில அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி தான் மோடி கருணாநிதியை சந்தித்திருப்பார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.

தினத்தந்தி பவளவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்ற மோடி கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி,

மயிலாப்பூரில் இருக்கும் சில அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி தான் மோடி கருணாநிதியை சந்தித்திருப்பார். இது மோடியின் யோசைனையாக இருக்காது. ஏன் என்றால் மோடியின் மனப்பான்மை எப்படியானது என்று எனக்கு தெரியும். இதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு கிடையாது என்றார்.

மேலும், மோடி – கருணாநிதி சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் இருக்காது என்றும் இதனால் 2ஜி தீர்ப்பிலும் மாற்றம் இருக்காது என்றும் சுப்ரமணியன்சா’மி கூறினார்.

மேலும் படிக்க