• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி – கமல்

March 17, 2021 தண்டோரா குழு

சட்டபேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.இதற்காக கடத்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் மாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பின், கமல் நேற்று காலை உக்கடம், ராமநாதபுரம் பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.இந்நிலையில், இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி என கூறியுள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பல்வேறு தரப்பினரிடம் தொடர்ச்சியாக உரையாடியதில் கோவையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதை அறிந்து கொண்டேன். இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி எனக்
கூறியுள்ளார்.

மேலும் படிக்க