March 17, 2021
தண்டோரா குழு
சட்டபேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.இதற்காக கடத்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் மாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின், கமல் நேற்று காலை உக்கடம், ராமநாதபுரம் பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.இந்நிலையில், இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி என கூறியுள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பல்வேறு தரப்பினரிடம் தொடர்ச்சியாக உரையாடியதில் கோவையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதை அறிந்து கொண்டேன். இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி எனக்
கூறியுள்ளார்.