• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளைஞரின் உயிரை காப்பற்றிய கண்பார்வையற்ற இளைஞர்

September 7, 2017 தண்டோரா குழு

மும்பை ரயில் நிலையத்தில் ரயிலிருந்து கீழே விழுந்த நபரை கண்பார்வையற்ற இளைஞர் காப்பாற்றியுள்ளார்.

மும்பையின் கல்யாண் நகரில் வசித்து வரும் கண்பார்வையற்ற இளைஞர் சலீம்.இவர் தாதர் ரயில் நிலையத்தில் புலாங்குழல் வாசித்து, தன் வாழ்நாளை கழித்து வந்தார். அவர் கடந்த திங்கள்கிழமை மதியம் சுமார் 3.45 மணிக்கு மதிய உணவை வாங்க பிளாட்பாரம் 5க்கு வந்தார்.

அப்போது, திடீரென யாரோ ஒருவர் கீழே விழுந்த சத்தம் கேட்டுள்ளது.உடனே அங்கு என்ன நடந்தது என்று விசாரித்தார். ரயிலிருந்து கீழே ஒருவர் விழுந்து விட்டார் என்று உணவு வழங்கும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கீழே விழுந்தவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.இச்சம்பவத்தை கண்பார்வை இல்லவிட்டாலும் தனது செவி திறனால், சலீம் அறிந்துக்கொண்டார்.

இதனையடுத்து தாதர் ரயில்வே காவல்நிலைய அதிகாரிக்கு சலீம் தகவல் தந்தார். தகவல் அறிந்த அவர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கீழே விழுந்து கிடந்த வரை தூக்கி கொண்டு, ரயில்வே அவரச அறைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பிறகு, அருகிலிருந்த சியோன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அடிபட்ட அவரின் பெயர் பாபுராம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் தகவல் தந்து, பாபுராமின் உயிரை காப்பாற்றிய சலீமை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் படிக்க