• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !

April 30, 2019 தண்டோரா குழு

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கி அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புபொறுப்பேற்றுள்ளது. இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் அந்நாட்டு அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியது.

இதற்கிடையில்சமூகவலைதளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 8 நாட்களுக்கு பிறகு இலங்கையில் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க