• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று மோடி பேச்சு

May 12, 2017 தண்டோரா குழு

இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப் பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக, இலங்கை சென்றுள்ளார்.

அப்போது அங்கு இன்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே பேசிய பிரதமர் மோடி,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது என்று குறிப்பிட்டார். அப்போது கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.அதிமுகவை பாஜக கைப்பற்ற இருப்பதாக பேச்சு நிலவி வரும் நிலையில் எம்.ஜி.ஆர். பெயரை மோடி உச்சரித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க