• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணி இடை நீக்கம்

February 2, 2019

ஆவணப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை ஷங்கரின் மனைவி கவுசல்யா. அதன் பின் ஆவண கொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சங்கர் பெயரில் சமூகநீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். பெரியாரிய கருத்துக்களை பரப்பினார். பறை இசை கற்றுக்கொண்டார்.இதனிடையே, , கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் கிளர்க் பணி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், சமீபத்தில் கோவையில் பறை இசை கலைஞரான சக்தி என்பவரை ககவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். சக்தி தொடர்பான சர்ச்சைகளால் சில தரப்பிலிருந்து இந்த திருமணம் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தெரிகிறது.. இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க