• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு குவியும் உதவிகள்

August 26, 2017 எலிசபெத்

சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னர் ஓடிஸா மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் மறுக்கப்பட்டுதாலும், அவரிடம் பணம் இல்லாத காரணத்தினாலும், மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றார். தற்போது அவருக்கு பலரிடம் இருந்து உதவிகள் குவிய தொடங்கியுள்ளன.

இவர் அவருடைய கிராமம் வரை மனைவியை தூக்கி சென்ற புகைப்படம் இணைய தளத்தில் வைரலாக பரவியது. அதை பார்த்த மக்களின் உள்ளங்கள் உடைந்து போயின.

அந்த சம்பவம் நடந்து, ஒரு ஆண்டிற்கு பிறகு, அந்த குடும்பத்தில் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளது. அந்த பரிதாபமான சம்பவத்தை குறிந்து கேள்விபட்ட மக்கள், அவருக்கு நன்கொடை தந்தது உதவினர்.

அந்த நன்கொடையால், அவருக்கு சுமார் 37 லட்சம் கிடைத்துள்ளது. அந்த தொகையை கொண்டு, அவருடைய 3 மகள்களை புவனேஸ்வர் நகரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.

ஓடிஸா மாநில அரசு, இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ், அவருக்கு ஒரு வீட்டை வழங்கியுள்ளது. அதோடு பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, சுமார் 9 லட்சம் ரூபாய் காசோலையை அவருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க