• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த பெண் உயிர் பெற்று மீண்டும் இறந்தார்

September 7, 2017 தண்டோரா குழு

கேரளாவில் இறந்துவிட்ட பெண் உயிரோடு இருப்பதை அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னம்(51) உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடைய உறவினர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மஞ்சள்காமாலை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் நீண்ட நாள் உயிர்வாழ போவதில்லை என்று அறிந்த மருத்துவர்கள், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு அவருடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரத்தினத்தின் உறவினர்கள் அவரை நேற்று(செப்டம்பர் 6) ஆம்புலன்ஸ் மூலம், வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவரின் மூச்சு நின்று இருப்பதையும் உடலில் எந்த அசைவும் இல்லை என்பதை கவனித்த உறவினர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவருக்கு கடைசி சடங்குகளை செய்ய, அவருடைய உடலை எடுக்க வந்த உறவினர்கள், அவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மருத்துவர்களுக்கு தகவல் தந்தனர். அங்கு வந்த அவர்கள், ரத்தினத்தை பரிசோதித்து விட்டு, அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து,அவரை அவசர பிரிவில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை அவர் இறந்துவிட்டார்.

மேலும் படிக்க