• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரவில் பெண்களின் பாதுகாப்பை அறிய கிரண்பேடி ரகசிய நகர்வலம்

August 19, 2017 தண்டோரா குழு

புதுச்சேரியில் இரவு வேளையில் பெண்களின் பாதுக்காப்பை அறிய ஆளுநர் கிரண்பேடி இருசக்கர வாகனத்தில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக முதல்வர் நாரயணசாமிக்கும், ஆளுநருக்கும் இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. ஆளுநர் எந்த தொகுதிக்கு சென்றாலும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிப்பது இல்லை என்று நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார்.

எனினும், ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணமே உள்ளார். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இரவில் பெண்கள் பாதுக்கப்பு மற்றும் குற்றம் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுகின்றனரா என்று முகத்தை மூடியவாறு, இருசக்கர வாகனத்தில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி டிஜிபி சுனில்குமார் கவுதமுக்கு இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை போலீசார் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்ல வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தான் இரவு ரோந்து சென்றபோது சீருடை அணிந்த ஒரு காவலரை கூட காணவில்லை.

காவல்கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர அழைப்புகளுக்கு பொறுப்பு யார்? என்பதை எழுத்துப்பூர்வ கட்டளை மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதனை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க