• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலைசின்னத்தை மீட்க 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் செய்த அமைச்சர்

June 12, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டில்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி இரண்டு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து இரு அணிகளும் இரட்டை இலை சின்னதை உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் பிரமாண பத்திரங்கள் தலைமை தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில்ம, சசிகலா அணி சார்பில் 4வது முறையாக இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட 1,52,000 பிரமாணப் பத்திரங்களை சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். இதுவரை சசிகலா தரப்பில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சசிகலா தரப்பினர் ஆவணங்கள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க