• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் பாரதிராஜா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

June 23, 2018 தண்டோரா குழு

தேசத்துக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 11-ம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா,

தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் தமிழகத்தில் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் பாராதிராஜவின் பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக புகார் அளித்தனர்.

இந்த புகார் திருவல்லிக்கேணி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சர்சைக்குரிய பேச்சு, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் பாரதி ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இவர் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்த நிபந்தனை ஜாமீனில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க