• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முனிசேகர் பணியிடைமாற்றம்

February 23, 2018 தண்டோரா குழு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில்,பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்த போது அவருடன் சென்ற உதவி காவல் ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என்று தெரியவந்தது.இதன் பின்னர் முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க