• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முனிசேகர் பணியிடைமாற்றம்

February 23, 2018 தண்டோரா குழு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில்,பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்த போது அவருடன் சென்ற உதவி காவல் ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என்று தெரியவந்தது.இதன் பின்னர் முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க