February 4, 2021 தண்டோரா குழு
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அகமது கபீர் அவர்கள் தலைமையில்,கோவை மாநகர காவல் ஆணியாளரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது தொடர்ந்து இஸ்லாமிய இயக்கத்தை பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தவறாக பேசி வருவதாகவும் ,கடந்த 2நாட்களுக்கு முன் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும்,இவர்களது மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகார் மனுவின் போது தமுமுக மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணை செயலாளர் நூறுதீன், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜுதீன்,ஆகியோர் உடனிருந்தனர்.