November 7, 2019 தண்டோரா குழு
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் காவி ஆடை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவள்ளுவர் படங்கள் மற்றும் திருக்குறள் புத்தகத்தோடு வந்து அக்கட்சியினர் மனு அளித்தனர்.
அனைவருக்கும் பொதுவானவரான திருவள்ளுவருக்கு இந்துத்துவ அடையாளங்களை அர்ஜீன்சம்பத் புகுத்தி இருப்பதாகவும், திட்டமிட்டு பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்துத்துவா அரசியலை முன்வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகலயில் அர்ஜுன்சம்பத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதனால் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.