• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்துத்துவ அமைப்பினர்களை முதல்வர் சந்திக்க மறுக்கிறார் – இந்து முன்னணி கண்டனம்

October 26, 2021 தண்டோரா குழு

தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அலகு குத்தி ஆண்டி வேடமணிந்து குழந்தைகளுக்கு கடவுள் மற்றும் பாரத மாதா வேடமணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுய மாநில செயலாளர் கிஷோர் கூறுகையில்,

தமிழக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதால் தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு கால பூஜை கூட நடைபெறாத கோவில்கள் பல உள்ளதாகவும் அதனை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் இந்த திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகளை முதல்வர் சந்திக்க மறுப்பதாகவும் கூறினார்.

மேலும் படிக்க