• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தி நடிகர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா காலமானார்

December 14, 2017 தண்டோரா குழு

இந்தி நடிகர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா இன்று (டிசம்பர் 14) மும்பையில், தனது 54வது வயதில் காலமானார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நீர்ஜா வோரா. இவர் இந்தி நடிகர் மற்றும் இயக்குநனரும் கூட. சில மாதங்களுக்கு முன், அவருக்கு மாரடைப்பு மற்றும் முளை பக்கவாதம் ஏற்பட்டத்தை அடுத்து, மும்பை நகரின் அந்தேரியில் உள்ள க்ரிடிக் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 மாதங்களாக கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று(டிசம்பர் 14) அதிகாலை சுமார் 4 மணியளவில் உயிரிழந்தார்.

அவருடைய உடல் மும்பையில் உள்ள திரு. பிரோஸ் நாடியாவாலாவின் பார்காட் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, அதன் பிறகு, மும்பையின் Santa Cruz Electric Crematoriumக்கு மதியம் சுமார் 3 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்ஜா வோரா ‘Mann’, ‘Holi’, ‘Virasat’ ‘Rangeela’ஆகிய இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘Phir Hera Pheri’, ‘Khiladi 420’ஆகிய திரைப்படங்களின் இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு இந்தி நடிகர் பரேஷ் ராவால் தனது ட்விட்டரில்,
’பிர் ஹீரா பெரி’ மற்றும் பல வெற்றி இந்தி திரைப்படங்களின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் நீர்ஜா வோரா இனி உயிரோடு இல்லை. ஓம் சாந்தி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க