February 12, 2018
தண்டோரா குழு
இந்திரா காந்தியை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெயலலிதா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.
சட்டபேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் குற்றவாளி என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது என்றும், குற்றமற்றவர் என்ற மனநிலையோடே ஜெயலலிதா மரணித்துள்ளார்.என்னைப் போன்ற பெண்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு என்றும் உண்டு.
மேலும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.அவருடைய மணிமண்டபம் கட்ட எனது ஆதரவு எப்போதும் உள்ளது எனவும், ஜெயலலிதா படம் சிறந்த சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.