• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய விமானப்படையில் எர்மேன் ஆள் சேர்ப்பு முகாம்

October 4, 2017 தண்டோரா குழு

இந்திய விமானப்படையில் எர்மேன் ஆள் சேர்ப்பு முகாம் வேலூர் வூரி கல்லூரி மைதானத்தில் 09.10.2017 முதல் 12.10.2017 வரை நடைபெறவுள்ளது.இந்த பணிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டும் தகுதியானவர்கள்.குறைந்தபட்ச கல்வித்தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணிதம்,இயற்பியல் ஆகிய பாடங்களில் 50 சதவீதமும்,ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதார்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.(10,+2) மதிப்பெண் சான்றிதழ்களில் மாவட்டம் குறிப்பிடாமல் இருந்தால், தனியாக இருப்பிட சான்றிதழ் பெற்று வர வேண்டும்.இருப்பிட சான்றிதழ் வாங்க முடியாதவர்கள் தான் படித்த கல்லூரி முதல்வரிடம் கையொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.

மதுரை,திருநெல்வேலி,விருதுநகர்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கை,கிருஷ்ணகிரி,திருச்சி,விழுப்புரம் சேலம்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்தவர்களுக்கு 09.10.2017 அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆள் சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வேலூர்,கன்னியாகுமரி,தேனி,தஞ்சாவூர்,திருவண்ணாமலை,சென்னை,திருவள்ளூர்,திண்டுக்கல்,தர்மபுரி,கோவை,காஞ்சிபுரம் திருப்பூர்,நாமக்கல்,ஈரோடு,நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சார்ந்தவர்களுக்கு 12.10.2017ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆள் சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் படிக்க