March 1, 2018
தண்டோரா குழு
இந்திய மொரிசியஸ் நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது என்று மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்திய மொரிசியஸ் நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர், தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே அவர்கள் கற்கின்றனர்.
தமிழ் மொழியை எழுதவும்,படிக்கவும் சிரம படிகின்றனர் எனவும் தமிழ் மொழியை மகாத்மா காந்தி பல்கலைகழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மொரிசியஸில் தமிழர்களின் பண்டிகைகள், பொங்கல்,சிவராத்திரி உள்ளிட்டவற்றை தொடர்ந்து சிறப்பாக கொண்டாடி வருவதாகவும், தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் கூறினார்.சிரியாவில் நிகழும் வன்முறை வருத்தமளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.