• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நவீனவேலிகள் – கிரண் ரிஜிஜு

February 3, 2017 தண்டோரா குழு

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் விரைவில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் அண்டை நாடுகளுடன் சுமார் 3,323 கி.மீ., வரை உள்ளது. இந்திய எல்லைகளில் உள்ள வேலிகளைத் துண்டித்துவிட்டு பயங்கரவாதிகள் எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவுகின்றனர்.

அதைத் தடுப்பதற்காக எல்லையில் ‛சென்சார்’, கண்காணிப்பு கேரமாக்கள், ‛ரேடார்’ உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகளுடன் கூடிய நவீன வேலிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்காக நவீன வேலிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் ரிஜுஜு தெரிவித்தார்.

மேலும் படிக்க