• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய உணவுகளுக்கு தடைவிதித்த எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகள் அதிர்ச்சி !!

July 4, 2018 தண்டோரா குழு

துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவு வகைளுக்கு தடை விதிப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை மெனுவாக வைத்து வழங்கிவருகிறது. அந்த வகையில் துபாயை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச விமான நிறுவனம் எமிரேட்ஸ். இந்நிறுவனம் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் செல்லும் பயணிகளுக்காக சர்வதேச விமான நிறுவனங்கள் பல வகையான உணவுகளை தயாரித்து கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமான சேவைகளிலிருந்து இந்திய உணவுகளுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்குவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்வது எங்கள் சேவைத் திறனை மேம்படுத்த துணைபுரியும். அத்துடன், பயணிகள் விமானத்தில் கொடுக்கப்படும் இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் இந்திய பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க