• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் நான் வருவேன்

June 6, 2017 தண்டோரா குழு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க விருப்பமாக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2017ம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி தொடர் நடந்து வருகிறது. ஜூன் 1ம் தேதி இத்தொடர் தொடங்கியது. இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் கடந்த ஞாயிறன்று விளையாடியது. இதில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

இதற்கிடையில், இப்போட்டியின் போது இந்தியாவில் தேடப்படும் தொழிலதிபர் விஜயமல்லையா ஜாலியாக அமர்ந்து போட்டியை கண்டு ரசித்திருந்தார். அவர் போட்டியை பார்க்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், விஜயமல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில்,

நான் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வந்தது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க நான் வருவேன் எனக் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி உலக தரம் வாய்ந்த கேப்டன். அவர் ஒரு ஜெண்டில்மேன் என்றும் மல்லையா கூறியுள்ளார்.

மேலும் படிக்க