• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் மறைவு

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் ரஷ்யாவில் வியாழக்கிழமை (ஜனவரி 26) காலமானார். அவருக்கு வயது 67.

கடந்த 2௦௦9ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான ரஷ்யத் தூதராக அவர் பணியாற்றினார். அவர் உடல் நலக் குறைவால் ரஷ்யாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “அலெக்சாண்டர் கடாகின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அவர் போற்றத்தக்கத் தூதர், இந்தியாவிற்கு நல்ல நண்பர், இந்திய ரஷ்ய உறவுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாடுப்பட்டவர்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது “ட்விட்டர்” பக்கத்தில் கூறியதாவது, “அலெக்சாண்டர் கடாகின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய மரணத்தால் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தூதரக அதிகாரியை, நல்ல நண்பரை இழந்து விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அலெக்சாண்டர் கடாகின் ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் சிசினு என்னும் இடத்தில் 1949ம் ஆண்டு பிறந்தார். 1972ம் ஆண்டு மாஸ்கோ நகரில் உள்ள சர்வதேச உறவுகள் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றார். 1972ம் ஆண்டு இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக தனது தூதரகப் பணியைத் தொடங்கினார்.

மேலும் படிக்க