• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் முதன் முறையாக நடிகைகள் பாதுகாப்பு சங்கம்

May 19, 2017 தண்டோரா குழு

நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதன்தொடர்ச்சியாக சினிமாவில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர்.

இதனால் நடிகைகளின் பாதுகாப்பு, சமமாக மதிக்கப்படுவது குறித்து விரிவான விவாதங்கள் எழுந்தன.இந்நிலையில், தற்போது நாட்டில் முதல்முறையாக, மலையாள நடிகைகள் சேர்ந்து ஓர் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியிருக்கின்றனர்.இந்த அமைப்பிற்கு ‘வுமன் இன் சினிமா கலக்ட்டிவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சன்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழி நடத்தவுள்ளனர். மேலும், பெண் கலைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, அதற்கான ஆதரவைப் பெற நேற்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை இந்த அமைப்பினர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க