• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டிராபிக் ரோபோ விரைவில் அறிமுகம் !

January 14, 2019 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். ஒருபுறம் பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் அதனை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை மறுபுறம் போக்குவரத்தை சீர் செய்ய சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் போக்குவரத்தை கவனிக்க டிராபிக் ரோபோ விரைவில் வலம் வர உள்ளது. இந்த ரோபோ சாலையை மக்கள் கடக்கவும் வாகனங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சி கூடத்தை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாகவும் எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க