January 14, 2019
தண்டோரா குழு
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். ஒருபுறம் பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் அதனை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை மறுபுறம் போக்குவரத்தை சீர் செய்ய சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் போக்குவரத்தை கவனிக்க டிராபிக் ரோபோ விரைவில் வலம் வர உள்ளது. இந்த ரோபோ சாலையை மக்கள் கடக்கவும் வாகனங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சி கூடத்தை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாகவும் எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம் பெற்றிருந்தது.