• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மகளே உன்னை வரவேற்கிறேன் –உஸ்மாவை வரவேற்ற சுஷ்மா

May 25, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறிய இந்திய பெண் உஸ்மா இன்று நாடு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி, தன்னை, பாக்., நபர் திருமணம் செய்து கொண்டதாக கூறிய இந்திய பெண் உஸ்மா, நாடு திரும்ப, இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து உஸ்மா வாகா எல்லை வழியாக நாடு திரும்பினார். இந்திய எல்லையை அடைந்த உஸ்மா இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டார்.

இந்நிலையில், உஸ்மா இந்தியா வந்தடைந்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,இந்தியாவின் மகளை வரவேற்கிறேன். பாகிஸ்தானில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க