• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் மகளே உன்னை வரவேற்கிறேன் –உஸ்மாவை வரவேற்ற சுஷ்மா

May 25, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறிய இந்திய பெண் உஸ்மா இன்று நாடு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி, தன்னை, பாக்., நபர் திருமணம் செய்து கொண்டதாக கூறிய இந்திய பெண் உஸ்மா, நாடு திரும்ப, இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து உஸ்மா வாகா எல்லை வழியாக நாடு திரும்பினார். இந்திய எல்லையை அடைந்த உஸ்மா இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டார்.

இந்நிலையில், உஸ்மா இந்தியா வந்தடைந்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,இந்தியாவின் மகளை வரவேற்கிறேன். பாகிஸ்தானில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க