இந்தியன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோ என்டாலஜி,தமிழ்நாடு கிளையின் ஆண்டு கூட்டம் 2025 மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில் கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் & மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் முதல் நாளான இன்று,250 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாட்டின் முன்னணி இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் பங்கேற்று சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களை விளக்கும் அதிநவீன விரிவுரைகளை வழங்கினர்.
கல்லீரல்,செரிமான உறுப்புகள் மற்றும் கணையம் தொடர்பான நோய்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக,முன்னணி நிபுணர்களின் குழு விவாதங்கள் புதிய சிகிச்சை முறைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்கின.
இந்த இருநாள் மாநாடு, குடலியல் மருத்துவ துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா