• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணைய வழி மூலம் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த வேளாண் பல்கலைகழக மாணவி !

May 13, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி சினேகா பாட்டில்,பயிர் நோயியல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது முனைவர் பட்ட படிப்பிற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். அவர் தனது ஆய்வுக் கட்டுரையை “தக்காளியில் ஸ்ட்ரெப்டோமசைன் வளர்சிதை மாற்றத்தின் எதிர்ப்பு மற்றும் உணர்திறன் மற்றும் நோய் மேலாண்மைக்கான உத்திகள்” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார்.

கொரோனா தொற்று நோய் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மாணவி சினேகா தனது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இச்சமயத்தில் இன்று மாணவி சினேகா அவரது ஆய்வுக்கட்டுரை முடிவுகளை இணைய வழி வாயிலாக பல்கலைக்கழக துணைவேந்தர், ஆராய்ச்சி ஆலோசகர்கள், வகுப்பு தோழர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அவரது ஆராய்ச்சி முடிவுகளை விளக்கினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விளக்க காட்சிக்குப் பிறகு,அவருடைய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆராய்ச்சிக் குழுவானது மாணவி சினேகாவை முனைவர் பட்டம் பெற்றவராக அறிவித்தனர்.

இது குறித்து மாணவி சினேகா கூறுகையில்,

இதை ஒரு நாளும் என் வாழ்வில் நான் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை. எனது வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு இது என்று பூரிப்படைந்தார்.இருப்பினும் எனது கல்லூரி வாழ்வின் கடைசி காலாண்டை எனது நண்பர்களுடன் அனுபவிக்க முடியாமலேயே எனது கல்லூரிக்காலம் நிறைவடைந்து விட்டது. இது எனக்கு சிறிது வருத்தமாக உள்ளது.

தற்போது அந்த மாணவி வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க