August 21, 2017
தண்டோரா குழு
அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணிகள் இணைவதில்தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்., தலைமை கழக அலுவலகம் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சசிகலா நீக்கம் குறித்த தீர்மான நகலை அளித்தால் மடடுமே தலைமைக் கழகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் இரு அணிகள் இணைப்பில் தாதமம் ஏற்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.
தற்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒ.பி.எஸ் இல்லத்தில் பேச்சிவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே இன்று மாலை ஜெயலலிதா சாமதி முன்பு அணிகள் இணையும் என அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.