May 21, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டாம் கட்ட மக்களைவை தேர்தலின் போது தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த பின் 7ம் கட்ட தேர்தலின் போது 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில், 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டின.
இந்நிலையில், இந்நிலையில், இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.