• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 10, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 7 செ.மீ., மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். கடலோர பகுதிகளில் வெயில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும். உள்மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க