• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்தில் பள்ளியில் மாணவர்கள் டிரௌசர் அணிய தடை!

June 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் டிரௌசர் அணிய தடை விதித்தால், மாணவிகள் அணியும் குட்டிப்பாவடை அணிந்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இங்கிலாந்தில் தற்போது அதிக வெப்பம் இருப்பதால், அங்குள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு டிரௌசர் அணிந்து வந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு டிரௌசர் அணிந்துக்கொண்டு வரகூடாது என்று தடை விதித்தது. இதனால் கோபம் கொண்ட மாணவர்கள் மாணவிகள் அணியும் குட்டிப்பாவடை அணிந்துக்கொண்டு பள்ளி வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பள்ளி மாணவன் ஒருவனின் தாய் கூறுகையில், “மாணவர்கள் டிரௌசர் அணிந்துக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்றும் வேண்டுமென்றால் மாணவிகள் அணியும் குட்டிப்பாவடையை அணிந்துக்கொண்டு வரலாம் என்றும் டிரௌசர் அணிந்துக்கொண்டு பள்ளிக்கு வந்தால், அவர்களை தனி அறையில் பூட்டப்படுவார்கள் என்று அவனுடைய வகுப்பு ஆசிரியர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

பள்ளியின் நிர்வாகம் அறிவித்த தடையை எதிர்த்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் குட்டிப்பாவடை அணிந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க