• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவராக மீண்டும் கெய்த் வாஸ் தேர்வு

August 16, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் எம்பியாக இருந்த கெய்த் வாஸ் மீண்டும் அந்தக் கட்சியின் தலைவராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியில் நீண்ட நாள் எம்பியாக பணியாற்றியவர்.மேலும், அந்த கட்சியின் ஒரு பிரிவான National Executive Committee யில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் கெய்த் வாஸ் போட்டியிட்டார். அதே கட்சியை சேர்ந்த அஸ்கார் கான் அவரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் கெய்த் 72.2 சதவீத வாக்குகள் பெற்று அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

“இதனை ஆண்டுகள், நான் செய்துக்கொண்டிருந்த பணியை மீண்டும் தொடர ஆவலோடு இருக்கிறேன். லேபர் கட்சி மூலம் நாட்டிற்கு பல காரியங்களை செய்ய வேண்டும். இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் Black Asian and Ethnic Minority (BAME) பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று என்னுடைய பிரச்சாரத்தில் நான் தெரிவித்ததை நிரூபிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் இந்தியாவின் கோவா மாகணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க