• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஆஸ்கார் மட்டும்தான் வாங்குவாரா? கொதித்தெழுந்த கங்கை அமரன்.

May 6, 2016 தண்டோரா குழு

இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்தியா சினிமாவின் 63வது தேசிய விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது.

தாரைத் தப்பட்டை படத்திற்குப் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் அவர் இந்த விழாவைப் புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது அவருக்குப் பிடிக்கவில்லையாம்.

இது பற்றி தேசிய விருது குழுவில் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்த இவரது தம்பி இயக்குநர் கங்கை அமரனிடம் கேட்டபோது, இந்தச் செயல் முற்றிலும் தவறானதாகும். பிடிக்கவில்லை என்று முதலிலேயே கூறியிருந்தால் வேறு ஒரு இசையமைப்பாளருக்காவது இந்த விருது கிடைத்திருக்கும். இப்படி திமிராக நடந்து கொள்வது பற்றிப் பல ரசிகர்கள் என்னிடம் மனசு வருந்திக் கேட்கும் போது கோபம் வருகிறது.

இப்படி விருதை ஏற்காமல் அவமானப்படுத்துவது கலைஞனுக்கு அழகல்ல. தாரைத் தப்பட்டை படத்தில் இடம் பெற்ற வதன வதன பாடல் ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு என்ற பழைய பாடலின் காப்பி. பிறகு எப்படிப் பாடலுக்கு விருது கொடுக்க முடியும். ஆஸ்கார் விருது கொடுத்தால் தான் வாங்குவாரா என்று கொந்தளித்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க