• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆழியாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது

September 9, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டின் வழியாக ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்
தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

“கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையின் பழைய ஆயக்கட்டின் வழியாக ஒரு போக பாசனத்திற்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வரும் 10-ம் தேதி முதல் ஜனவரி 08-ம் தேதி வரை 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க.அடிக்கு மிகாமல் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

மேலும், நஞ்சை பாசனத்திற்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடபட உள்ளது. இதனால் 6400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிளுக்குட்பட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு கேடுக்கொள்கிறேன்,”
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க