• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் – மு.க ஸ்டாலின்

September 5, 2017 தண்டோரா குழு

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் உரிமை குழு நோட்டீஸ்தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“உரிமை மீறல் நோட்டீக்கு பதில் அளிக்க 15நாள் அவகாசம் கேட்டுள்ளோம். சட்ட நிபுணர்களை ஆலோசித்து தான் இதுக்குறித்து பதிலளிக்க முடியும்.

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உரிமை இல்லை. இன்றைக்கு நடந்த அவரது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதனால் தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும். இனியும் ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க