• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுக பிரமுகர் கைது

December 16, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் 13 லட்சம் பணத்தை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆர்.கே.,நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில் உள்ள பிசியோதெரபி சென்டரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் ரூபாயும் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக வாக்காளர்கள் பெயர் பட்டியலுடன் கூடிய பூத் ஸ்லிப்களையும் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் கைபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க